Wednesday, May 19, 2010

தமிழ் பண்பாடு

மேற்கின் நடை கண்டு
நம்மவர் பண் மறந்து
அரைகுறை ஆடையில்
தரணியை வலம் வரும்
நாகரிகப் பெண்டிரே
கேளும் ஒரு சேதி...

புருவம் வில்லாக
பார்வை கணையாக
கொவ்வை இதழாக
சங்கு கழுத்தாக
உடுக்கை இடையாக இருந்தாலும்

கற்பு குடையாக
பண்பாடு மறக்காத
தன்மானம் உடையாக
கொண்ட நல் பாவையர்
கண்டும் நம் காளையர்
மனத்தாலும் தீங்கிழையார்
மறந்தும் அவள் நிழல் தொடார்..

அறிவிரோ நீவிர் - தமிழ்
பண்பாட்டின் சிறப்புதனை

1 comment: