Thursday, April 15, 2010

உயிரே

உன் பூவிழி வாசலின்
பார்வை ஒன்றே போதுமே
துள்ளாத மனமும் துள்ளுமே
16 வயதினிலே பள்ளிக்கூடத்தில்
உன்னைப் பார்த்த நாள் முதல்
தந்துவிட்டேன் என்னை.

ஒரு வார்த்தை சொல்ல
சில வருடம் காத்திருந்தேன்
இப்போது எனக்கு 20 உனக்கு 18
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
கூடியிருக்க காதலால் தந்தேன்
ஆசையில் ஓர் காதல் கடிதம்
மைதிலி என்னைக் காதலி என்று

உள்ளத்தை அள்ளித் தந்தாய்
உன் கண்ணில் கண்டேன் காதலை
உன்னைப் போல் ஒருவன்
இவ்வுலகில் இல்லை - நீ
ஆயிரத்தில் ஒருவன் என்றாய்
என்னை நீதான் பிரிந்தாலும்
உன்னை நான் பிரியேன் என்றாய்

நினைத்தாலே இனிக்கும்
நம் கல்லூரி நாட்களை...

கண் இமைக்கும் நேரத்தில்
நடந்தது அந்த மதுரைச் சம்பவம்
தலைநகரம் வந்தாய் - நீ
போகும்போது அணிந்திருந்த ஆடையில்
வாரணம் ஆயிரம் ஆனால் வரும்போது
நனைந்திருந்தது சிவப்பு மழையில்.

எங்கே எனது கவிதை
ஏன் இந்த மௌனம்
பிரியமானவளே உனக்காக பிரியமுடன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
விண்ணைத் தாண்டி வருவாயா........

No comments:

Post a Comment