Saturday, July 24, 2010

உலகில் முடியாதது எதுவுமில்லை

all have to see this

http://www.youtube.com/watch?v=Gc4HGQHgeFE

Saturday, May 29, 2010

அவள் யார் ????

அழகிற்கோர் இலக்கணம் அவள்
பொறுமையின் சிகரம் அவள்
கவி பாடும் புலவர்-அவளைப்
புகழ் மேடையில் ஏற்றிடுவர்.
நாம் வியக்கும் அணு ஆயுதம்
அவள் முன்னே சிறு ஆயுதம்.
கடையெழு வள்ளல்கள்- அவள்
கொடை முன்னே தோற்றிடுவர்.
அவளுக்கொரு துணையில்லை
உறவினரும் அருகில் இல்லை.
அவள் வளர்த்த பிள்ளைகள்
பலகோடி பேர் உண்டு.
இருந்தும் என்ன பயன்
அவள் சோகம் யாரறிவார்?
கேட்கவும் யாருமில்லை!!!
கேட்டாலும் யாரும் இல்லை!!!!...

அவள் யார் ?????????

Wednesday, May 19, 2010

தமிழ் பண்பாடு

மேற்கின் நடை கண்டு
நம்மவர் பண் மறந்து
அரைகுறை ஆடையில்
தரணியை வலம் வரும்
நாகரிகப் பெண்டிரே
கேளும் ஒரு சேதி...

புருவம் வில்லாக
பார்வை கணையாக
கொவ்வை இதழாக
சங்கு கழுத்தாக
உடுக்கை இடையாக இருந்தாலும்

கற்பு குடையாக
பண்பாடு மறக்காத
தன்மானம் உடையாக
கொண்ட நல் பாவையர்
கண்டும் நம் காளையர்
மனத்தாலும் தீங்கிழையார்
மறந்தும் அவள் நிழல் தொடார்..

அறிவிரோ நீவிர் - தமிழ்
பண்பாட்டின் சிறப்புதனை

Sunday, May 09, 2010

வானம்

நீலம் உன் வண்ணம்
நெடுநீளம் உன் தேகம்
வெண்மை உன் சிரிப்பு
கருமை உன் அழுகை
கண்ணெதிரில் நீயுண்டு
தொட்டுணர யாருமில்லை

மெய்ஞானம் உனை வாழ்த்தும்
விஞ்ஞானம் உனை வாட்டும்-உன்
மேனியில் பட்ட காயம்
அறிஞர் சிலர் செய்த மாயம்

உன் நலமே எம் நலம்
அதை உணரும் காலம் வரும்
அயலவனை எதிரியென
எண்ணிய மனிதனவன்
தனைக் காக்க எண்ணி
தனக்கே எதிரியானன்
என்றுணர்வான் இம்மூடன் -அன்று
பிழைக்கும் மனிதகுலம்........

Wednesday, April 28, 2010

உள்ளே நீ வெளியே நான்

புல்மேல் பனித்துளி
விளையாடும் வேளை
கிளைமேல் சிட்டுக்குருவி
கவிபாடும் காலை

உன்மேல் நானிருந்தேன்
ஒலி கேட்டு விழித்தெழுந்தேன்
கண்ணாடியில் உன் உருவம்
கண்டு களித்தவள் நானல்லவோ
உன் முன்னாடி வந்து நின்று
முதன் முறை ரசிக்கின்றேன்.

நீ இப்புவி கண்ட நாள் முதல்
என் துணையுடன் நீயிருந்தாய்
ஆடினோம் பாடினோம்
ஒன்றாக விளையாடினோம்
எம்மைப்போல் ஒன்றாக வாழ்ந்த
மனிதரும் இப்புவியில் உண்டோ...

எங்கிருந்தோ வந்தான்
காதலெனும் வலை விரித்தான்
என்னுயிர் நீயென்றான்
என்னவளைத் தனதென்றான்
மனசு எனும் மூடன்
உன் மதிதனை மறைத்ததினால்
அவன் பொன்மொழியில் மயங்கினாய்
என்னையும் நீ மறந்தாய்
அவன் உடனிருந்த வேளையிலே..

திருமணமும் நடந்தது
இரு மனமும் சேர்ந்தது
ஈருடல் ஓருயிராய்
சீருடனும் சிறப்புடனும்
உறவுகள் போற்ற வாழ்ந்தாயே..

யார் கண்கள் பட்டதுவோ
உன் கனவுகள் சிதைந்ததுவே
உன் சொர்க்க வாழ்வுதனைக்
காணச் சகிக்காமல்
வந்துவிட்டான் காலனவன்
உன் கணவன் உயிர் கொண்டு
சென்றுவிட்டான் ஒரு விபத்துதனில்.

சிறகுடைந்த பறவையாய்
கிளையொடிந்த மரமாய்
களையிழந்து நீ நின்றாய்
தனிமரமாய் என்னுடனே.

அன்று முதல் இன்று வரை
நீ அழுதால் நான் அழுதேன்
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
உனக்கது தெரியவில்லை
என்னை நீ அறியவில்லை

துனைவன் உனைப் பிரிந்ததால்
எனை நீ பிரிவாய் என
நான் என்றும் நினைத்தேனோ?

நிழலாடிய நினைவுகளை
விழியிருந்து அகற்றினேன்
கண்ணாடியில் உன் பிம்பம்
தெரியவில்லை எனக்கு
தேடினேன் ஓடினேன் -ஐயகோ...
முடிந்துவிட்டது எல்லாம்
நின்றுவிட்டது உன் இதயம்
புதைத்துவிட்டனர் உன்னை
உள்ளே நீ வெளியே நான்..

இப்படிக்கு உன் ஆத்மா

Tuesday, April 27, 2010

சுதந்திரம்

நாம் பிறந்த பூமி நமக்கில்லை
இனிப் பிறப்போர் வாழ வழியில்லை
உதிரம் கொடுத்துக் காத்தனர் மறவர்
உதிரம் காக்க விற்றனர் சிறியர்
விலைமகள் கொடுத்தாள் தன் மேனி பிறர்க்கு
விலைமகன் கொடுத்தான் தன் பூமி பிறர்க்கு
புகையில்லை மதுவில்லை வீரமறவர் ஆண்ட போது
இரண்டும் வந்தது விலைமகளுடன் கொடியவர் ஆளும்போது
காலம் மாறும் காட்சிகள் மாறும்
வீழ்ந்தவர் எழுவர் புதுமுகம் காட்டுவர்
கயவர் ஓடுவர் புறந்தனைக் கட்டுவர்
விண்ணும் மண்ணும் வியக்கும் அன்று
நம் தமிழன் கொண்ட நெஞ்சுறுதி கண்டு
கனவுச் சுதந்திரம் கைகளில் கண்டு
களிக்கும் நாள் வரும் கலங்காதே இன்று.

Thursday, April 22, 2010

உலகத் தமிழ் இணைய மாநாடு

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்குரிய கட்டுரைப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் மாபெரும் போட்டியை தமிழக அரசு நடத்துகிறது.

கலை, ​​ அறிவியல்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ விளையாட்டு,​​ வேளாண்மை,​​ சட்டம்,​​ கல்வியியல், இயக்குநர் மருத்துவம் ​(பிசியோதெரப்பி), சித்த மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ செவிலியர்,​​ கால்நடை மருத்துவம்,​​ பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ,​​ மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்..

மேலும் விவரங்கள் அறிய........
http://www.tamilint2010.tn.gov.in

Thursday, April 15, 2010

உயிரே

உன் பூவிழி வாசலின்
பார்வை ஒன்றே போதுமே
துள்ளாத மனமும் துள்ளுமே
16 வயதினிலே பள்ளிக்கூடத்தில்
உன்னைப் பார்த்த நாள் முதல்
தந்துவிட்டேன் என்னை.

ஒரு வார்த்தை சொல்ல
சில வருடம் காத்திருந்தேன்
இப்போது எனக்கு 20 உனக்கு 18
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
கூடியிருக்க காதலால் தந்தேன்
ஆசையில் ஓர் காதல் கடிதம்
மைதிலி என்னைக் காதலி என்று

உள்ளத்தை அள்ளித் தந்தாய்
உன் கண்ணில் கண்டேன் காதலை
உன்னைப் போல் ஒருவன்
இவ்வுலகில் இல்லை - நீ
ஆயிரத்தில் ஒருவன் என்றாய்
என்னை நீதான் பிரிந்தாலும்
உன்னை நான் பிரியேன் என்றாய்

நினைத்தாலே இனிக்கும்
நம் கல்லூரி நாட்களை...

கண் இமைக்கும் நேரத்தில்
நடந்தது அந்த மதுரைச் சம்பவம்
தலைநகரம் வந்தாய் - நீ
போகும்போது அணிந்திருந்த ஆடையில்
வாரணம் ஆயிரம் ஆனால் வரும்போது
நனைந்திருந்தது சிவப்பு மழையில்.

எங்கே எனது கவிதை
ஏன் இந்த மௌனம்
பிரியமானவளே உனக்காக பிரியமுடன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
விண்ணைத் தாண்டி வருவாயா........

Wednesday, April 14, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

காரிருள் சூழ்ந்திடும் நடுநிசியில்
ஆறிரண்டு மணியடித்த வேளைதனில்
விழியிரண்டும் மழைதனில் நனைந்திடவே
தன் பணிதனை செவ்வனவெ முடித்ததனால்
வரவேற்கிறாள் புதிய புத்தாண்டை......

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

- சாந்தன்

Saturday, April 10, 2010

ஜோதிடம்

* சாமுத்திரிகா லட்சணம்

* தொல்காப்பியர் கூறும் திருமணப் பொருத்தங்கள்

* காதலில் உங்கள் குணம் எப்படி?

* 27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்

* 12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள்

* ராசியான வர்ணங்கள்

* எண்களால் எதிர்காலம்

* எண்களும் உடல் நலமும்

* பிறந்த நாளுக்கேற்ற வர்ணம்

* பெண்களின் கைகள் சொல்லும் ஜோதிடம்

* பெண்களின் பாத ஜோதிடம்

* பெண்களின் நட்சத்திர பலன்கள்

* மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு

* மச்ச ஜாதகம் பெண்களுக்கு

* உத்தியோகம் புருஷ லட்சணம்

மேற்காணும் தலைப்புகளைப் பற்றி அறிய கீழுள்ள தொடுப்பினைச் சொடுக்கவும்

http://www.santhan.com

Friday, April 09, 2010

சாமுத்ரிகா சாத்திரம்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.

இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பற்றி விரிவாகக் காண இங்கே சொடுக்கவும்.

http://www.santhan.com/

கற்போம் கணினி

தமிழில் கணினியைக் கற்க வேண்டுமா . கவலை வேண்டாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சொடுக்கி சாந்தன் வலைத்தளத்திற்கு வாருங்கள்.

http://www.santhan.com/

Wednesday, April 07, 2010

யோகாசனம்

ஆசன வகைகள்
* பத்மாசனம்
* யோகமுத்ரா
* உத்தீதபத்மாசனம்
* சானுசீரானம்
* விபரீதகரணி
* சலபாசனம்
* வக்ராசனம்
* உட்கட்டாசனம்
* அர்த தனுராசனம்
* பீடாசனம்
* பூ‌ர்ண தனுராசன‌ம்
* சூர்ய நமஸ்கார ஆசனம்
* தடாசன‌‌ம்
* விபரீத நவ்காசனம்
* சோமாசனம்
* உத்தித குருமாசானம்
* ஸ்வஸ்திக்காசனம்
* சுப்தவஜ்ராசனம்
* ஜனு சிராசனம்
* கோமுகாசனம்
* குக்குட்டாசனம்
* வஜ்ராசனம்
* சசாங்காசனம்
* சித்தாசனம்
* உஷ்ட்ராசனம்
* பர்வதாசனம்
* அர்த்தமத்ஷ்யோதிராசனம்
* தொலாங்குலாசானம்
* சிரசாசனம்
* மண்டுகாசனம்
* குர்மாசனம்
* கிரவுஞ்சாசனம்
* ஏக பாத சிரசானம்
* தண்டாசனம்
* பூரண டைடாளியாசனம்
* நமஸ்கராசனம்
* தியான வீராசனம்
* சிம்காசனம்
* வீராசனம்
* பாததிராசனம்
* உபவிஷ்த கோணாசனம்
* பிராணமாசனம்
* பாதபத்மாசனம்
* லோலாசனம்
* பாரிஹாசனம்
* ஹனுமானாசனம்
* விருச்சிகாசனம்
* அர்த்த சிராசனம்
* சாம ஆசனம்
* பாதஹஸ்தாசனம்
* ஏகபாதாசனம்
* வீரபத்ராசனம்
* ஹஸ்தபாடாசனம்
* பாதாங்குஸ்தாசனம்
* ஏகபாதஹஸ்தாசனம்
* உட்டியாசனம்
* திரிகோணாசனம்
* அர்த்த சக்ராசனம்
* உத்தித ஜனுசிராசனம்
* உத்தாசனம்
* டோலாசனம்
* அர்த்தகடிசக்ராசனம்
* திரிக தடாசனம்
* காதி சக்ராசனம்
* பரிவிருத்த திரிகோணாசனம்
* சாம கோணாசனம்
* பார்ஸவகோணாசனம்
* மூர்த்தாசனம்
* வாட்டாயானாசனம்
* பிரசாரித்த பாதோத்தாணாசனம்
* டிருடா உட்காடாசனம்
* தூவிகோனாசனம்
* சர்வங்காசனம்
* ஹாலாசனம்
* சவாசனம்
* மகராசனம்
* அட்வாசனம்
* ஜெயிஷ்டிகாசனம்
* மத்ஸ்ய கிரிடாசனம்
இவற்றைக் காண இங்கே சொடுக்குங்கள்..
http://www.santhan.com/

இலக்கணம்

தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள www.santhan.com ஒரு சிறந்த வலைத்தளம். இலக்கணத்தை வகைப்படுத்தி சிறந்த முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தைப் பார்வையிட இங்கே சொடுக்குங்கள். http://www.santhan.com/